அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான்: எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு

பெண்கள் பெண்மையை இழந்து வருவது வருத்தம் அளிக்கிறது. நான் அனுபவப்பட்டது, இந்திய பெண்கள் மற்ற நாட்டு பெண்களுக்கு இணையற்றவர்கள். ஆனால் அவர்கள் தற்போது

News image
Updated On :25 ஆகஸ்ட் 2019, 3:28 pm IST


சென்னை: இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30 சதவீதம் பேர்தான் உள்ளனர் என்று இந்திய ரிசர்வ் வங்கி இயக்குநர்களில் ஒருவரும், துக்ளக் ஆசிரியருமான எஸ். குருமூர்த்தி பேசியிருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தற்போது ஆர்பிஐ இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். அரசியல் ஆலோசகராக இருக்கும் இவர் பாஜக கட்சித் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமானவர். தமிழகத்திலும் அதிமுக தலைவர்களுடன் நெருக்கமாக இருக்க கூடியவர். சமீபத்தில் துணை குடியரசுத் தலைவர் சென்னையில் வெளியிட்ட புத்தக விழாவிலும் நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்திருந்த அதே மேடையில் இவரும் காணப்பட்டார். என்ன பேசினார் இந்த நிலையில் 

சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றின் 10 ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் எஸ். குருமூர்த்தி கலந்துகொண்டு பேசுகையில், இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30 சதவீதம் பேர்தான் உள்ளனர். நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து உயருவதற்கு காரணம் நம் குடும்பம். அதன் மையமாக இருப்பவர்கள் தான் பெண்கள். 

ஆனால் பெண்கள் முன்பு போல இப்போது இல்லை. அவர்களிடம் பெண்மை குறைந்துவிட்டது. பெண்ணிற்கும், பெண்மைக்கும் வித்தியாசம் இருக்கிறது. இப்போது இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் குறைந்துவிட்டன. 

பெண்மை இல்லாத பெண்கள் அதிகம் ஆகிவிட்டனர். பெண்மை உள்ள பெண்கள் தான் தெய்வம். அவர்களைதான் நாம் தெய்வமாக மதித்து வந்துள்ளோம். 

பெண்மை இல்லாத பெண்களை நாம் தெய்வமாக வணங்க மாட்டோம். அவர்களை அப்படி என்னால் ஏற்க முடியாது. விஞ்ஞானப்படி அப்படி சொல்லவும் முடியாது. பெண்கள் பெண்மையை இழந்து வருவது வருத்தம் அளிக்கிறது. நான் அனுபவப்பட்டது, இந்திய பெண்கள் மற்ற நாட்டு பெண்களுக்கு இணையற்றவர்கள். ஆனால் அவர்கள் தற்போது பெண்மையை இழந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு பெண்மையை உருவாக்க பெண்ணால் மட்டுமே முடியாது, அவர்களின் சூழ்நிலையும் மிக முக்கியமானது என்று கூறினார். 

பெண்மை குறித்த குருமூர்த்தியின் பேச்சு பெரிய பரபரப்பையும், சர்ச்சையும் ஏற்படுத்தி உள்ளது. குருமூர்த்தி பெண்களை இழிவுபடுத்தி பேசியிருப்பதாக சமூக ஊடகங்களில் அவருக்கு எதிராக பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.