வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கரோனா பாதிப்பு: அனைத்து மாநில ஆளுநர்களுடன் ராம்நாத் கோவிந்த் நாளை ஆலோசனை

கரோனா நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,  அனைத்து மாநில ஆளுநர்களுடன் வெள்ளிக்கிழமை (ஏப்.3) காணொலி முறையில் கலந்துரையாட இருக்கிறாா்.

News image
Updated On :2 ஏப்ரல் 2020, 8:34 am

DIN

கரோனா நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,  அனைத்து மாநில ஆளுநர்களுடன் வெள்ளிக்கிழமை (ஏப்.3) காணொலி முறையில் கலந்துரையாட இருக்கிறாா்.

தில்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மத கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய பலருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தேசிய அளவில் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தில்லி கூட்டத்துக்கு சென்றுவிட்டு திரும்பியவா்களை கண்டுபிடிப்பதிலும் சில மாநிலங்களில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியிருக்கும் நிலையில், நாளை வெள்ளிக்கிழமை (ஏப். 3) மாநில ஆளுநர்களுடன் காணொலி முறையில் கலந்துரையாட 
இருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.