சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மகாராஷ்டிரத்தில் மேலும் 117 பேருக்கு நோய்த்தொற்று: பாதிப்பு 2801 ஆக உயர்வு

மகாராஷ்டிரத்தில் புதன்ரகிழமை மேலும் 117 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தொற்றால் பாதிப்பட்டோரின் எண்ணிக்கை 2801 ஆக அதிகரித்துள்ளது

News image
Updated On :15 ஏப்ரல் 2020, 12:45 pm

DIN


மும்பை: மகாராஷ்டிரத்தில் புதன்கிழமை மேலும் 117 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தொற்றால் பாதிப்பட்டோரின் எண்ணிக்கை 2801 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியாவில் 21 நாட்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி விதிக்கப்பட்டிருந்த நிலையில், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஊரடங்கை மேலும்  மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். 

இந்த நிலையில் இந்தியாவிலேயே கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரத்தில் மேலும் புதன்கிழமை 117 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநில தலைநகரான மும்பையில் 66 பேரும், புனேயில் 44 பேருக்கும், தாராவில் இருந்து மேலும் 7 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநிலத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,801 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, மகாராஷ்டிரத்தில் 160 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் நோய்த்தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருகிறது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மும்பை மருத்துவமனை ஒன்றின் ஊழியர்களில் மேலும் 10 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையின் ஊழியர்களில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.