சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இந்தியாவில் 4 கோடி தொழிலாளர்கள் நிலைமை மேலும் மோசமடையும்: உலக வங்கி எச்சரிக்கை

கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கையால் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்துள்ள 4 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்

News image
worldbank082221
Updated On :23 ஏப்ரல் 2020, 11:26 am

DIN

கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கையால் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்துள்ள 4 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிலைமை மேலும் மோசமடையும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. 

இதுகுறித்து உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில், கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இதனால், சிறு குறு தொழில் நிறுவனங்களும் மிகப் பெரிய தொழிற்சாலைகளும் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. சாதாரண தொழில் அமைப்புகளும் முடக்கப்பட்டதால், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என சுட்டிக்‍காட்டிய உலக வங்கி, தெற்காசிய பிராந்தியங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், வெளிநாடு மற்றும் உள்நாட்டில் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் மோசமாகப் பாதித்துள்ளனர். குறிப்பாக, இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்துள்ள 4 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஊரடங்கு அமலான ஒருசில நாட்களிலேயே, சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நகரப்பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த கிராமப்பகுதிகளுக்கு திரும்பினர் என சுட்டிக்காட்டிய உலக வங்கி, இது எந்த வகையிலும் அவர்களுக்குத் தீர்வாக அமையாது என தெரிவித்துள்ளது. 

மேலும் இந்தியாவில் மே 3 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதால், இந்த தொழிலாளர்களின் நிலை மேலும் மோசமடையும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

"இந்தியாவில், 2020 ஆம் ஆண்டில் பணம் அனுப்புதல் சுமார் 23 சதவிகிதம் குறைந்து 64 பில்லியன் அமெரிக்க டாலராக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 5.5 சதவிகித வளர்ச்சிக்கும், 2019 ஆம் ஆண்டில் காணப்பட்ட 83 பில்லியன் அமெரிக்க டாலர் ரசீதுகளுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மாறுபாடு" என்றும்,  பணம் அனுப்புவது வளரும் நாடுகளுக்கு ஒரு "முக்கிய வருமான ஆதாரமாகும்"  என்று கூறியுள்ளது.

பணம் அனுப்புவது குடும்பங்களுக்கு உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை தேவைகளை வாங்குவதற்கு உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. 

கொடிய கரோனா நோய்த்தொற்றுக்கு உலகம் முழுவதும் இதுவரை 26,48,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,84,352- க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.