குலதெய்வ வழிபாட்டிற்காக வந்தவர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பு: எம்.எல்.ஏ நிதியுதவி
குலதெய்வ வழிபாட்டிற்காக வந்தவர்கள்,சொந்த ஊர் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு எம்.எல்.ஏ நிதியுதவி மற்றும் அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.


குலதெய்வ வழிபாட்டிற்காக வந்தவர்கள்,சொந்த ஊர் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு எம்.எல்.ஏ நிதியுதவி மற்றும் அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.
சேலம் மாவட்டம் சீனிபட்டியை சேர்ந்தவர்கள் 11 பேர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே படந்தாலில் உள்ள தங்களது குலதெய்வமான முத்துமாரியம்மன் கோவிலுக்கு தங்களின் நேர்த்திகடன்களை செலுத்துவதற்காக ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்னர் வந்தனர்.
திடீரென ஊரடங்கு என அறிவிக்கபட்ட நிலையில் தனது சொந்த ஊர் செல்ல முடியமால் தவித்து வந்தனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு தங்கும் இடவசதி, மூன்று வேலையும் உணவுகள் அனைத்து சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் வழங்கி வந்தார்.
இந்நிலையில், வெள்ளிகிழமை 11 பேரை நேரில் சந்தித்த ராஜவர்மன் அவர்களுக்கு நிதியுதவி அளித்து,சாத்தூரில் மருத்துவ பரிசோதனை செய்து பின்னர் தனது சொந்த செலவில் சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சாத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் அம்மா உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பைகளை எம்.எல்.ஆர்.ராஜவர்மன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக கழக ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...