காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேதாரண்யம்: பள்ளிகளில் பாடநூல்கள் வழங்கல்

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

News image

தோப்புத்துறை ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் புத்தகங்கள் வழங்கிய வட்டாரக் கல்வி அலுவலர் சி.சிவகுமார்.

Updated On :3 ஆகஸ்ட் 2020, 9:20 am

DIN

வேதாரண்யம், ஆக.3: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய (இந்து) தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்த பணியை வட்டாரக் கல்வி அலுவலர் வி.சிவக்குமார் தொடங்கி வைத்தார்.

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜி.கோவிந்தராஜுலு, பொருளாளர் ஆர்.சுந்தர்ராஜன், துணைத் தலைவர் வி.ஆர்.வீரராசு, துணைச் செயலாளர் கே.வெற்றிவேல், தலைமையாசிரியர் சு.தட்சிணாமூர்த்தி  ஆசிரியர்கள் கி.சாந்தி, கே மாணிக்கம்,  ஜி.அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.