டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ராமர் கோயிலுக்காக ம.பி. காங்கிரஸ் சார்பில் 11 வெள்ளி செங்கற்கள் அனுப்பிவைப்பு

அயோத்தியில் ராமர் கோயில் பூமிபூஜை நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளதையொட்டி, மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் சார்பில்  வெள்ளியாலான 11 செங்கற்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:03 pm

DIN

போபால்: அயோத்தியில் ராமர் கோயில் பூமிபூஜை நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளதையொட்டி, மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் சார்பில்  வெள்ளியாலான 11 செங்கற்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர்கோயில் பூமிபூஜை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பூமி பூஜை நிகழ்வில் பிரதமர் மோடி உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

பூமிபூஜைக்காக பல்வேறு இடங்களில் இருந்து புனித நீர், மண் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் சார்பில் வெள்ளியாலான 11 செங்கற்கள் அயோத்திக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மேலும், மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் இல்லத்தில் அனுமன் பாராயணம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பின்னர் அவர் பேசியதாவது, மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் தொண்டர்கள் அளித்த நிதியின் மூலம் ராமர் கோயிலுக்கு 11 வெள்ளியாலான செங்கற்கள் அனுப்பப்பட்டன. நாளை (புதன் கிழமை) நாடே காத்துக்கொண்டிருந்த வரலாற்று சிறப்புமிக்க தினம். மாநில மக்களின் நலனுக்காக அனுமன் பாராயணம் நடத்தப்பட்டது என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், மக்களின் ஒத்துழைப்புடன் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளது. இராம ராஜியம் தொடங்குவதற்கான முழு பெருமையும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையே சாரும் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.