புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அணைகள் நிரம்பி வருவதால் காவிரி ஆற்றில் சுமார் 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை.

News image
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Updated On :5 ஆகஸ்ட் 2020, 1:00 pm

DIN

பென்னாகரம், ஆகஸ்ட் 05: கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பி வருவதால் காவிரி ஆற்றில் சுமார் 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம் மாண்டியா குடகு மற்றும் கேரளா வயநாடு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக அணைகள் ஆன கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து சுமார் 30 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைகளுக்கு வரும் நீர் அப்படியே திறக்கப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவின்பேரில் காவிரி கரையோர பகுதிகளான ஆலம்பாடி, ஊட்டமலை முதலை பண்ணை, சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கும் வகையில், ஒகேனக்கல் அரசு துவக்கப்பள்ளி, ஊட்டமலை துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி கட்டிடங்களில் தங்க வைக்க வருவாய்த் துறையின் சார்பில் முகாம் அமைக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.