டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பிரதமர் மோடி பதவிப்பிரமாணத்தை மீறிவிட்டார்: அசாதுதீன் ஒவைசி

ராமர் கோயில் பூமிபூஜையில் பங்கேற்றதன் மூலம் பதவிப்பிரமாணத்தை மோடி மீறிவிட்டதாக ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார்.

News image
ஹைதராபாத் எம்.பி அசாதுதீன் ஓவைசி
Updated On :27 ஜனவரி 2024, 5:04 pm

DIN

ஹைதராபாத்: ராமர் கோயில் பூமிபூஜையில் பங்கேற்றதன் மூலம் பதவிப்பிரமாணத்தை மோடி மீறிவிட்டதாக ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார்.

அயோத்தியில் ராமர்கோயில் கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இது குறித்து அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசியதாவது, இந்தியா மதச்சார்பின்மை கொண்ட நாடு. இத்தகைய நாட்டில் ராமர் கோயில் பூமிபூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரதமர் நரேந்திரமோடி பகிரங்கமாக பதவிப்பிரமாணத்தை மீறியுள்ளார். ராமர் கோயிலுக்கு பூமிபூஜை செய்யப்பட்ட இந்த தினம், ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் தோற்ற தினம். இந்துத்துவா வென்ற தினம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், ராமர் மீது கொண்ட நம்பிக்கையால் பிரதமர் நரேந்திர மோடி இன்று உணர்ச்சிவசப்பட்டதாக மேடையில் கூறினார். நானும் அந்த அளவுக்கு இன்று உணர்ச்சிவசப்பட்டேன். ஏனென்றால் நான் சகமனித வாழ்வு மற்றும் சம உரிமையின்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்.

பிரதமர் மோடி ராமர் கோயில் பூமிபூஜையில் கலந்துகொள்ளக் கூடாது எனக் கூறினேன். ஏனென்றால் மதச்சார்பின்மை கொண்ட நாட்டில் ஒருமதம் சார்ந்த பூமிபூஜை நிகழ்ச்சியில் மட்டும் பிரதமர் கலந்துகொள்வதால் அந்த மதம் சார்ந்த நம்பிக்கைகளை மட்டுமே பெரும்பான்மையானோர் நம்பவேண்டும் என்ற நிலை உருவாகிறது. 

நாட்டிற்கு மதம் இல்லை. இந்தியாவும், அதனை ஆளும் அரசும் மதத்தை கொண்டுள்ளதா?. மோடி இஸ்லாமியர்களுக்கும், சீக்கியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கூட பிரதமர் தான். அதனால் பிரதமராக இத்தகைய செயல்களில் அவர் (நரேந்திர மோடி) ஈடுபடக்கூடாது இவ்வாறு ஒவைசி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.