சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல் கோழிப் பண்ணைகளில் 28 கொத்தடிமைகள் மீட்பு

நாமக்கல் அருகே கோழிப்பண்ணைகளில் கொத்தடிமைகளாக இருந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 28 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

News image
நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் மாநில பெண்கள்
Updated On :10 ஆகஸ்ட் 2020, 12:32 pm

DIN

நாமக்கல் அருகே கோழிப்பண்ணைகளில் கொத்தடிமைகளாக இருந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 28 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் 600 க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய அளவிலான கோழிப்பண்ணைகள் உள்ளன. பெரும்பாலான பெரிய பண்ணைகளில் வடமாநிலத்தவர்கள் அங்கேயே தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாமக்கல்லை அடுத்த அணியாபுரம், எஸ்.வாழவந்தி, லத்துவாடி ஆகிய இடங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் 15 முதல் 25 வயதுடைய சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 25 பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் வேலை பார்த்து வந்தனர்.

அவர்களுக்கு பல மாதங்களாக சரிவர ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் எம்.கோட்டைக் குமாருக்கு அவர்கள் புகார் அளித்தனர்.

இதனையடுத்து திங்கள் கிழமையன்று கோட்டாட்சியர் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அமைப்பினர் சம்மந்தப்பட்ட கோழிப் பண்ணைகளுக்கு சென்று அங்கிருந்த 28 பேரையும் மீட்டு நாமக்கல் அழைத்து வந்தனர்.

நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அவர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் உணவுகள் விநியோகிக்கப்பட்டன. அந்த 28 பேரையும் சொந்த மாநிலத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் மூன்று கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மீது வருவாய்த் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.