புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விமான நிலையத்தில் கனிமொழி சொல்வதுபோல் நடந்திருக்க வாய்ப்பு மிகக்குறைவு: பாஜக மாநிலத் தலைவர் 

விமான நிலையத்தில் கனிமொழி சொல்வதுபோல் நடந்திருக்க வாய்ப்பு மிக மிகக்குறைவு என்றார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்  தலைவர் முருகன்.

News image

கோப்புப்படம்

Updated On :12 ஆகஸ்ட் 2020, 11:46 am

DIN

பெரம்பலூர்: விமான நிலையத்தில் கனிமொழி சொல்வதுபோல் நடந்திருக்க வாய்ப்பு மிக மிகக்குறைவு என்றார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்  தலைவர் முருகன்.

பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது,

கந்த சஷ்டி கவசம் குறித்து காணொளி மூலம் அவதூறு செய்ததால் கைது செய்யப்பட்டவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரித்து, அவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்தும், பாஜகவின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டும் பலர் மாநிலம் முழுவதும் பாஜகவில் இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதையை இது காட்டுகிறது.

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் இரட்டைத் தலைமை குறித்து அதிமுகவில் சிலர் சர்ச்சை கிளம்புவது அதிமுக உள்கட்சி விவகாரம். அது குறித்து நான் சொல்ல எதுவுமில்லை.

நாடறிந்த விஐபியான கனிமொழி விஐபி புரோட்டோகால்படி சிஐஎஸ்எஃப் நபர்களிடம் பேச வேண்டிய அவசியமே இல்லை. விமான நிலையத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு மிக மிகக் குறைவு. அரசியல் செய்வதற்காக இந்த விவகாரத்தை கனிமொழி பெரிதுபடுத்தி பேசுவதாக தெரிகிறது.

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அனைத்து மாநிலங்களிலும் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக இ-பாஸ் முறை தமிழகத்தில் இன்னமும் நடைமுறையில் உள்ளது.

பல்வேறு தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கியுள்ள இந்நேரத்தில் இ-பாஸ் முறை தேவையற்றது. இ-பாஸ் நடைமுறையை தமிழக முதல்வர் ரத்து செய்ய வேண்டும் என தமிழக பாஜக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்ட பெரம்பலூர் மாவட்ட பாஜக நிர்வாகியை கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.