பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பிரியங்கா மோகன் மகிழ்ச்சி..! வெற்றிக் கொண்டாட்டத்தில் மேட் இன் கொரியா படக்குழுவினர்!

நடிகை பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா படத்தின் வெற்றி குறித்து...

Priyanka Arul Mohan and her Made In Korea team.

வெற்றிக் கொண்டாட்டத்தில் மேட் இன் கொரியா படக்குழுவினர். - படங்கள்: இன்ஸ்டா / பிரியங்கா அருள் மோகன்.

Published On :

நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ படத்தின் வெற்றியை நெட்பிளிக்ஸ் கொண்டாடியுள்ளது. இந்தக் கொண்டாட்டத்தில் பிரியங்கா மோகன் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

நித்தம் ஒரு வானம் படத்தின் இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி உள்பட 12 மொழிகளில் மார்ச் 12ஆம் தேதி வெளியானது.

இந்தப் படத்தில் நாயகியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த பெண், கொரிய கலாசாரத்தின் மீதுள்ள ஈர்ப்பால் தென் கொரியாவிற்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு அவர் சந்திக்கும் சவால்களை மையப்படுத்தி ’பீல் குட்’ பாணியில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் வெற்றியைப் படக்குழுவுடன் சேர்ந்து நெட்பிளிக்ஸ் கொண்டாடியுள்ளது.

இந்த வெற்றி விழாவில் நடிகை பிரியங்கா மோகன், இயக்குநர் ரா. கார்த்திக் உடன் படக்குழுவினர் மற்றும் நெட்பிளிக்ஸ் நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.

Summary

Netflix celebrates the Global success of Priyanka Mohan Made In Korea with its incredible team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.