சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 243 கோடி திட்டப் பணிகள்: முதல்வர் நாளை மறுநாள் தொடக்கி வைக்கிறார்

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.243.35 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

News image
முதல்வர் வருகை தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியரகத்தில் நேரில் பார்வையிட்ட அமைச்சர்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா
Updated On :19 ஆகஸ்ட் 2020, 11:56 am

DIN

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ரூ.243.35 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் வெ.சரோஜா ஆகியோர் அதிகாரிகளுடன் புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியது: நாமக்கல் மாவட்டத்திற்கு கரோனா ஆய்வு பணிக்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வருகிறார். அப்போது புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும், முடிவடைந்த கட்டுமானங்களை திறந்து வைத்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசுகிறார். அதன்பின் கரோனா தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். 

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் மின்வாரிய அலுவலகம், கம்பங்கள் சேதம் ஏற்பட்டது. அவற்றை சீரமைக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. கேங்மேன் பணியிடங்களை பொறுத்தவரை, அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

வழக்கு நிறைவுக்கு பின் பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தரம் செய்வது தொடர்பாக விரைவில் மேலாண் இயக்குனர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது‌. அதன்பின் எனது தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்று உரிய தீர்வு காணப்படும் என்றார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.பி.பாஸ்கர், சி.சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி, காவல் கண்காணிப்பாளர் சி.சக்தி கணேசன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.