தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

விழுப்புரம்: கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 60 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

News image
Updated On :19 ஆகஸ்ட் 2020, 5:21 am

DIN


விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 60 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கலையூர் கூட்ரோடு, கடம்பூர் கிராமத்தை சேர்ந்த 60 வயது முதியவர், கடந்த 12 ஆம் தேதி கரோனா தொற்று அறிகுறியோடு, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 335 வது வார்டில், உள் நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

 புதன்கிழமை அதிகாலை அந்த வார்டில் உள்ள ஜன்னலில், தனது லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து விக்கிரவாண்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.