தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இந்திய எல்லைக்குள் நுழைந்தவர்கள் பாதுகாப்புப் படையால் சுட்டுக் கொலை

பஞ்சாபில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் இன்று காலை நுழைய முயன்ற 5 பேர் எல்லைப் பாதுகாப்புப் படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

News image

கோப்புப்படம்

Updated On :22 ஆகஸ்ட் 2020, 7:53 am

ANI

பஞ்சாபில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் இன்று காலை நுழைய முயன்ற 5 பேர் எல்லைப் பாதுகாப்புப் படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் கூறுகையில்,

டர்ன் டரன் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 103 வது பிரிவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு பகுதியில் ஆள் நடமாட்டம் காணப்பட்டது.

அப்பகுதியில் தடையை மீறி 5 பேர் பாகிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து இந்திய பகுதியில் நுழைய முயன்றனர். அதைக் கண்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் அவர்களை சுட்டுக் கொன்றனர்.

மேலும், அவர்களிடமிருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.