மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கல்லூரி, பல்கலைக்கழக இறுதித் தேர்வுகளை நடத்த தடையில்லை: உச்ச நீதிமன்றம் 

கல்லூரி, பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை என்றும் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

News image
கல்லூரி, பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை
Updated On :28 ஆகஸ்ட் 2020, 6:13 am

DIN


புதுதில்லி: கல்லூரி, பல்கலைக்கழக இறுதி ஆண்டு இறுதித் தேர்வுகளை நடத்த தடையில்லை என்றும் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கரோன தொற்று பரவல் அச்சுறுத்தலால் கல்லூரிகளில் பாடங்கள் நடத்தாததால் இறுதி ஆண்டு இறுதித் தேர்வை ரத்து செய்யக்கோரி மராட்டியம், தில்லி, மேற்குவங்கம் மற்றும் 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். 

இது தொடர்பாக நடந்த வழக்கில், தேர்வு நடத்தாமல் வழங்கப்படும் பட்டங்களை அங்கீகரிக்க முடியாது என பல்கலைக்கழக மானிய குழு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. 

இந்த மனுவை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு தீர்ப்பு வழங்கியது. 

தீர்ப்பில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இறுதி ஆண்டு இறுதித் தேர்வை நடத்தலாம் எனவும், இறுதித் தேர்வை நடத்த தடை இல்லை என தீர்ப்பளித்தது.

மேலும், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகளை நடத்தாமல் மாநில அரசு பட்டம் வழங்கக்கூடாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த பல்கலைக்கழக மானியக் குழுவின் ஜூலை 6 ஆம் தேதி சுற்றறிக்கையை உறுதி செய்தது.

மாணவர்களை ஊக்குவிக்க மாநிலங்கள் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று கூறிய நீதிமன்றம், பேரழிவு மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநிலங்கள் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு தேர்வுகளை ஒத்திவைக்க முடியும் என்றும் அதற்குரிய கால அவகாசத்தை பல்கலைக்கழக மானியக் குழுவை (யு.ஜி.சி) அணுகி கேட்கலாம் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.