விஷவாயு கசிவு தினத்தை முன்னிட்டு நாளை(வியாழக்கிழமை) துக்கம் அனுசரிக்க போபாலில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்படுவதாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
1984 டிசம்பர் 3ஆம் தேதி போபாலின் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய விஷவாயுவால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர், மேலும் லட்சக்கணக்கான மக்கள் நிரந்தர நோயாளிகளாக மாறினர்.
இதனையடுத்து, 36வது நினைவு நாளான நாளை போபால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.