தில்லியில் ரூ.1.3 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்திய விமான ஊழியர் கைது

ரூ.1.3 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்திய விமான ஊழியர் உள்பட 2 பேரை தில்லி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ரூ.1.3 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்திய விமான ஊழியர் உள்பட 2 பேரை தில்லி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தில்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் விமான நிறுவன ஊழியர் மற்றும் கேட்ரிங் நிறுவன ஊழியர்களிடமிருந்து 3.117 கிலோ எடையுள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 1.3 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்கள் 2 பேரையும் கடத்தல் வழக்கில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com