சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தில்லி - கொல்கத்தா தினசரி விமான சேவைக்கு அனுமதி: மேற்குவங்க அரசு

தில்லியிலிருந்து கொல்கத்தாவிற்கு இயக்கப்படும் தினசரி விமான சேவைகளுக்கு மேற்குவங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :14 டிசம்பர் 2020, 1:48 pm

ANI

தில்லியிலிருந்து கொல்கத்தாவிற்கு இயக்கப்படும் தினசரி விமான சேவைகளுக்கு மேற்குவங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. பின், படிப்படியாக மத்திய அரசுத் தரப்பில் விமான சேவைகள் இயங்கத் தொடங்கியது.

இருப்பினும், குறிப்பிட்ட மாநிலங்களில் கரோனா பரவல் அதிகமாக இருந்ததால் மேற்கு வங்க அரசு சில மாநிலங்களிலிருந்து விமானங்களை இயக்க கட்டுபாடுகள் விதித்திருந்தது.

இந்நிலையில், தில்லி - கொல்கத்தா தினசரி விமான சேவைகளைத் தொடர திங்கள்கிழமை மேற்குவங்க அரசு அனுமதி அளித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.