டிச.17-ம் தேதி வங்கதேச பிரதமருடன் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் மோடி

இந்திய - வங்கதேச பிரதமர்களிடையே டிசம்பர் 17ஆம் தேதி உச்சி மாநாடு நடைபெறவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்திய - வங்கதேச பிரதமர்களிடையே டிசம்பர் 17ஆம் தேதி உச்சி மாநாடு நடைபெறவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்தியில்,

இந்திய பிரதமர் மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இடையே டிசம்பர் 17 ஆம் தேதி இணையவழி உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

இதில் கரோனாவிற்கு பிந்தைய காலத்தில் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடல் நடத்துவார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com