நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சேவூர் அருகே தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு: சட்டப் பேரவைத் தலைவரிடம் மனு

சேவூர் அருகே 846 ஏக்கரில் தொழில் பூங்கா (சிப்காட்) அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபாலிடம் திங்கள்கிழமை மாலை மனு அளித்தனர்.

News image

சட்டப் பேரவைத் தலைவரிடம் மனு அளித்த பொதுமக்கள்

Updated On :14 டிசம்பர் 2020, 10:37 am

DIN

அவிநாசி: சேவூர் அருகே 846 ஏக்கரில் தொழில் பூங்கா (சிப்காட்) அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபாலிடம் திங்கள்கிழமை மாலை மனு அளித்தனர்.

சேவூர் அருகே தத்தனூர் ஊராட்சிப் பகுதியில் 846 ஏக்கரில் தொழில் பூங்கா அமைப்பதற்கு ஆரம்பகட்ட நடவடிக்கைகள் கடந்த வாரம் மேற்கொண்டனர். இதையடுத்து, தொழில் பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தத்தனூர், புலிப்பார், புஞ்சை தாமரைக்குளம் உள்பட அருகாமை ஊராட்சிகளைச் சேர்ந்த பொது மக்கள் சட்டப் பேரவைத் தலைவரும், அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினருமான ப.தனபாலிடம் மனு அளிக்க வந்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட சட்டப் பேரவைத் தலைவர் ப. தனபால் கூறியது:

பொதுமக்களுக்கு இடையூறான திட்டங்கள் 99.9 சதவீதம் செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம். மக்களின் கோரிக்கை
குறித்து சட்டப் பேரவையில் எடுத்துரைக்கப்படும் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.