மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

டிச.21-ல் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வருகை

இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் டிசம்பர் 21ஆம் தேதி தமிழகம் வருகின்றனர்.

News image
தேர்தல் ஆணையம்
Updated On :16 டிசம்பர் 2020, 11:34 am

DIN

இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் டிசம்பர் 21ஆம் தேதி தமிழகம் வருகின்றனர்.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழுவினர் டிசம்பர் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் தமிழகத்திற்கு வருகின்றனர்.

தமிழகம் வரும் உயர்மட்டக் குழுவினர் டிசம்பர் 21ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

அதனையடுத்து, தமிழக தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து டிசம்பர் 22ஆம் தேதி ஆலோசனை செய்யவுள்ளனர்.

மேலும், இந்த வருகையின் போது அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடம் கருத்துக்கள் கேட்கவும், மனுக்கள் பெறவும் வாய்ப்பு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.