உத்தரகண்ட் முதல்வருக்கு கரோனா

உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்
உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்

உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்றால் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சுட்டுரை செய்தியில்,

கரோனா பரிசோசதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகியுள்ளது. நான் நலமாக உள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனத் தெரிவித்தார்.

இதற்குமுன் உத்தரகண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மௌரியா மற்றும் சில சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com