

துபையிலிருந்து மதுரை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.17 லட்சத்து 95 ஆயிரத்து 850 ரூபாய் மதிப்புள்ள, 350 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
துபையிலிருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்கிழமை மதுரை வந்த பயணிகளை சோதனையிட்டனர். இதில் ராமேசுவரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த பயணி ஒருவர் கொண்டவந்த மர அறுவை இயந்திரத்தை கழற்றி சோதனையிட்டபோது அதில் 350 கிராம் தங்கம் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 17 லட்சத்து 95 ஆயிரத்து 850 ஆகும். தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் கடத்தி வந்தவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.