சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஆன்லைன் பதிவுக்கு எதிர்ப்பு: சிதம்பரத்தில் தீட்சிதர்கள் போராட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை எதிர்த்து தீட்சிதர்கள் தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image
போரட்டத்தில் ஈடுபட்டு வரும் தீட்சிதர்கள் மற்றும் பக்தர்கள்.
Updated On :27 ஜனவரி 2024, 6:14 pm

DIN

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை எதிர்த்து தீட்சிதர்கள் தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மார்கழி மாத திருவிழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நாளை தேரோட்டமும் நாளை மறுநாள் 30ஆம் தேதியன்று ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் கட்டாயம் இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் மற்றும் சிவபக்தர்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் வாசலில் சாலையில் அமர்ந்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.