டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

திருச்சி விமான நிலையத்தில் 798 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 798.5 கிராம் எடையுள்ள தங்க சங்கிலிகள் சுங்கத்துறை அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
பறிமுதல் செய்யப்பட்ட தங்கச் சங்கிலிகள்
Updated On :29 டிசம்பர் 2020, 4:14 pm

ANI

திருச்சி விமான நிலையத்தில் 798.5 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலிகள் சுங்கத்துறை அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சமீபகாலமாக சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் தொடர்ச்சியாக கடத்தல் தங்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணித்தவரை சோதனை செய்ததில், அவரது பையில் 798.5 கிராம் எடையுள்ள 2 தங்கச் சங்கிலிகள் இருந்தது.

அந்த சங்கிலியில் மதிப்பு ரூ. 40.72 லட்சம் எனக் கணக்கீடப்பட்டுள்ளது.

இதையடுத்து, சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.