நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்தியாகத்தை இந்தியா மறக்காது: மோடி 

புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்தியாகத்தை இந்தியா ஒருபோது மறக்காது என... 

News image

கோப்புப்படம்

Updated On :14 பிப்ரவரி 2020, 9:22 am

DIN


புதுதில்லி: புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்தியாகத்தை இந்தியா ஒருபோது மறக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் படையினர் பயணித்த வாகனத்தின் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதச் செய்து, ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த  பயங்கரவாதி தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். 

இந்த நிலையில் பிரமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள அஞ்சலி செய்தியில்,  புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்த , துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்கள் நமது நாட்டை பாதுகாப்பதற்கும், பணியாற்றுவதற்கும்  வாழ்க்கையை அர்ப்பணித்த விதிவிலக்கானவர்கள். அவர்களின் உயிர்தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது என பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.