சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அந்தியூர் பேரூராட்சி எல்லைக்குள் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு

அந்தியூர் பேரூராட்சிச் பகுதிகள் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

News image
அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தியூர் வட்டார செயலாளர் ஆர்.முருகேசன் மற்றும் நிர்வாகிகள்.
Updated On :2 ஜூலை 2020, 8:01 am

DIN

பவானி: அந்தியூர் பேரூராட்சிச் பகுதிகள் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் கட்சியின் வட்டாரச் செயலாளர் ஆர்.முருகேசன் தலைமையில் வியாழக்கிழமை அளிக்கப்பட்ட மனு:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி எல்லைக்குள் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. புதிதாக  மதுபானக்கடை திறக்கும் இடத்திலிருந்து சுமார் 500 அடிக்குள்தான் அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 2,500 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.

இம்மதுக்கடை திறக்கப்பட இருக்கும் முக்கிய சாலையான அந்தியூர் - பர்கூர் சாலையில்தான் ஆயிரக்கணக்கான நோயாளிகள் தினமும் வந்து செல்லும் அந்தியூர் அரசு மருத்துவமனை, அந்தியூர் பேரூராட்சி அலுவலகம், வனச்சரக அலுவலகம், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகம், வட்டார வள மைய அலுவலகம், தனியார் மருத்துவமனைகள் போன்றவை அடுத்தடுத்து வரிசையாக உள்ளன.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அந்தியூரில் இருந்து பர்கூர் வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் சாலையோரத்தில் மதுக்கடை திறக்கப்பட்டால் விபத்துக்களும் அதிகரிக்கும். எனவே பொதுமக்களின் நலன் கருதி மதுக்கடை திறக்க முடிவை நிரந்தரமாக கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் ஏ.எம்.பரமேஸ்வரன், கே.ஏ.குருசாமி, எஸ்.மாரிமுத்து எஸ்.வி.மாரிமுத்து, ஏ.கே.பழனிச்சாமி, எஸ்.செபாஸ்டியன், ஜி.பழனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.