தற்போதைய செய்திகள்
கம்பத்தில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கல்
கம்பத்தில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
கம்பத்தில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
தேனி மாவட்டம், கம்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோணா நிவாரண பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ராம்குமார் தலைமை வகித்தார். நகர செயலாளர் தங்கப்பாண்டி முன்னிலை வகித்தார். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்று தற்பொழுது தமிழகத்தில் பரவி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வாழ்வாதாரத்தில் பின்தங்கிய ஆதரவற்ற ஏழை எளியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், நாம் தமிழர் கட்சியினர் சார்பில் அரிசி மற்றும் மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.