சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரோடு டாஸ்மாக் கடைகளில் பாதியாக குறைந்த விற்பனை 

பணப் புழக்கம் இல்லாததால் ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை பாதியாக குறைந்தது.

News image
கோப்புப் படம்
Updated On :23 ஜூன் 2020, 8:09 am

DIN

பணப் புழக்கம் இல்லாததால் ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை பாதியாக குறைந்தது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், ஊரடங்கில் படிப்படியாக தளர்வு வழங்கப்பட்டுள்ளதால், பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய தொழில்சாலைகள் வரை மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன. அதேபோல், அரசு டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தற்போது மாவட்டம் முழுவதும் 207 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது கரோனா காரணமாக பணப்புழக்கம் இல்லாததால் மதுபிரியர்களின் வருவாய் கேள்விக்குறியானதால், மதுவாங்க பணம் இல்லாமல் டாஸ்மாக் கடைக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். 

இதன்காரணமாக மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுவிற்பனை 40 முதல் 50 சதவீதம் குறைந்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கரோனா ஊரடங்கு பாதிப்பில் இருந்து இன்னும் ஈரோடு முழுமையாக வெளிவரவில்லை. பல தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபிரியர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைய துவங்கியுள்ளது. இதனால், விற்பனையும் பாதியாக குறைந்துள்ளது. உதாரணமாக கிராமப்புறத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையில் தினந்தோறும் ரூ.1லட்சத்திற்கு தோராயமாக விற்பனையாகிறது என்றால் தற்போது ரூ.60ஆயிரத்திற்கு கீழ் விற்பனையாகிறது. 

இதேபோல் நகரப்பகுதியில் ரூ.3லட்சம் முதல் ரூ.4லட்சம் விற்பனையாகும் கடைகளிலும் பாதியாக குறைந்து விட்டது. டாஸ்மாக் மாவட்ட பொதுமேலாளர் மணிமொழி கூறுகையில், மாவட்டத்தில் தற்போது 207 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. கரோனா ஊரடங்குகிற்கு முன்பிருந்த மதுவிற்பனையை விட தற்போது குறைந்துள்ளது. அது ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் வேறுபட்டு உள்ளது. அதன் புள்ளிவிவரம் தற்போது தெரிவிக்க இயலாது. மாவட்டத்தில் பிற வணிக நிறுவனங்கள் விற்பனை நேரத்தை குறைத்தது போல, டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை குறைப்பது எங்களது கையில் இல்லை. டாஸ்மாக் தலைமை இயக்குநர் தான் முடிவெடுப்பார், என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.