6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் அடுத்தடுத்து உடைப்பு: குடிநீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் அவலம்

சீர்காழி அருகே கடலோர கிராமங்களுக்கு செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் அடுத்தடுத்து உடைப்பு ஏற்பட்டு வாய்க்காலில் பயனற்று செல்லும் குடிநீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

News image
Updated On :25 ஜூன் 2020, 4:20 am

DIN


சீர்காழி அருகே கடலோர கிராமங்களுக்கு செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் அடுத்தடுத்து உடைப்பு ஏற்பட்டு வாய்க்காலில் பயனற்று செல்லும் குடிநீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சுற்றியுள்ள கடலோர கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கபட்டு வருகிறது. கடும் வறட்சியால் போதிய தண்ணீர் இல்லாமல் கடலோர கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

Story image

இந்நிலையில் சீர்காழி அருகே  நாராயணபுரம் கிராமத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 10 நாள்களாக தினமும் பல்லாயிரம் லிட்டர் குடிநீர் அருகில் உள்ள வாய்க்காலில் செல்கிறது. இதனை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கபடாததால் பயனற்று வாய்க்காலில் செல்லும் தண்ணீரை அப்பகுதி விவசாயிகள் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். 

Story image

தண்ணீர் அதிகம் விரையமாவதால் கடலோர கிராமங்களுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. நாளுக்கு நாள் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வரும் நிலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் வாய்க்காலில் செல்வதும் விவசாயம் செய்யபடுவதும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே நாராயணபுரத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து தடையின்றி தண்ணீர் வழங்க கடலோர பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.