சென்னை சிஐடி காலனியில் உள்ள திமுக எம்.பி கனிமொழி வீட்டிற்கான காவலர்கள் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்ட நிலையில் மீண்டும் காவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் சம்பவத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் காவலர்கள் மீது சந்தேகம் இருப்பதாக திமுக எம்.பி கனிமொழி குற்றஞ்சாட்டிருந்த நிலையில், அவரது சென்னை சிஐடி காலனியில் உள்ள வீட்டிற்கான காவலர்கள் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு பணிக்கு காவலர்கள் தேவை உள்ளதாலும், கனிமொழிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதாலும் பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை சிஐடி காலனியில் உள்ள திமுக எம்.பி கனிமொழி வீட்டிற்கு மீண்டும் காவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.