கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோவையில் 70 சதவீதம் கடைகள் அடைப்பு

சாத்தான்குளம் வணிகர்களான தந்தை, மகன் விசாரணைக் காவலில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நீதி கேட்டு கோவையில் 70 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. 

News image
கோவையில் வாகன நெரிசல் குறைந்து சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. 
Updated On :26 ஜூன் 2020, 6:46 am

DIN


கோவை: சாத்தான்குளம் வணிகர்களான தந்தை, மகன் விசாரணைக் காவலில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நீதி கேட்டு கோவையில் 70 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. 

சாத்தான்குளம் வணிகர்களான தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணைக் காவலில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நீதி கேட்டு தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஒரு நாள் கடையடைப்பு போராட்டமும், கடையடைப்பை தொடர்ந்து மாலை 5 மணிக்கு அஞ்சலி செலுத்தப்படும் என வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர்கள் வெள்ளையன் , விக்கிரமராஜா ஆகியோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். 

Story image

கோவையில் வாகன நெரிசல் குறைந்து சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. 

அதன்படி, கோவையின் முக்கிய கடைவீதிகளான ரங்கே கவுடர் வீதி, ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதியில் பெரும்பாலான மளிகைக் கடைகள் திறக்கப்படவில்லை. இந்தக் கடையடைப்புக்கு ஆதரவாக மருந்துக் டைகள் காலை 7 முதல் 11 மணி வரையும், பேக்கரிகள், உணவு விடுதிகள் காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரையும் மூடப்பட்டன. கடையடைப்பு காரணமாக கோவையில் வாகன நெரிசல் குறைந்து சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. 

கோவை மாவட்டத்தில் 70 சதவீதம் மளிகைக் கடைகள் வெள்ளிக்கிழமை முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.