சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா பரவல்: மதுபான கடையை மூட சொல்லி  பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

ஒரத்தநாடு அருகே கரோனா பரவுதலை தடுக்கும் முயற்சியாக அரசு மதுபான கடையை மூட சொல்லி சனிக்கிழமை பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். 

News image
மதுபான கடையை மூட சொல்லி சனிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்திய பொதுமக்கள். 
Updated On :27 ஜூன் 2020, 8:36 am

DIN

ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே கரோனா பரவுதலை தடுக்கும் முயற்சியாக அரசு மதுபான கடையை மூட சொல்லி சனிக்கிழமை பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். 

ஒரத்தநாடு வட்டம் தொண்ட்ராம்பட்டு கிழக்கு பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரண்டு நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை தொண்டராம்பட்டு கிழக்கு, தொண்டராம்பட்டு மேற்கு , திருமங்கலக்கோட்டை மேல காலணி, திருமங்கலக்கோட்டை கீழ காலணி மற்றும் கண்ணுகுடி பகுதியைச் சேர்ந்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் பகுதியில் மேலும் கரோனா தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என்று அனைத்து மாளிகை கடைகள் மற்றும் உணவங்களை திறக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர். அதன் பேரில் சனிக்கிழமை இப்பகுதியில் கடைகள் மற்றும் உணவகங்கள் திறக்கவில்லை. 

இந்நிலையில் தொண்டராம்பட்டு - ஒரத்தநாடு சாலையில் உள்ள அரசு மதுபான கடைகள் திறக்கப்பட்டு மது விற்பணை நடைபெறுவதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் அரசு மதுபான கடையை மூட சொல்லி முற்றுகை  போராட்டம் நடத்தினர். 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தொண்டராம்பட்டு கிழக்கு பகுதியில் இரண்டு நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யபப்பட்டுள்ளது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் இந்த பகுதியில் ஒருவார காலமாக நடமாட்டத்தில் இருந்துள்ளார். 

இந்நிலையில் தொற்று பரவுதலை தடுக்கும் நோக்கில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த பகுதி வணிகர்கள் தங்கள் கடைகளை அடைத்திருக்கும் வேளையில் அரசு மதுபான கடை திறந்து வியாபரம் நடைபெறுவதால் 5 கிராமங்களுக்கு நோய் தொற்று பரவும் அபயாம் உள்ளது . ஆகவேதான் அரசு மதுபான கடையை மூட சொல்லி முற்றுகை போராட்டம் நடத்துகிறோம் என்றனர். 

தகவல் அறிந்து பாப்பநாசம் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.