சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

முழு பொதுமுடக்கம்: வெறிச்சோடியது மதுரை

மதுரை நகரில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டிருந்தது. இதனால் மதுரை நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வாகன போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது. 

News image
வெறிச்சோடி காணப்படும் மதுரை நகரின் முக்கிய சாலைகள்.
Updated On :28 ஜூன் 2020, 9:13 am

DIN

மதுரையில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையடுத்து மதுரை மாநகராட்சி பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து மதுரை நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வாகன போக்குவரத்து வெறிச்சோடி காணப்பட்டது. 

மதுரையில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையடுத்து மதுரை மாநகராட்சி பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முழு பொது முடக்கம் கடந்த 24 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மளிகை, காய்கறி, பால், மருந்து கடைகள், உணவகங்கள் மட்டும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இதை தவிர்த்து அனைத்து நிறுவனங்களுக்கும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. 

Story image

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் கடும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதில் பால், மளிகை காய்கறி, உணவகம், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மதுரை நகரில் மளிகை காய்கறி, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. மருந்து கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது. 

Story image

மேலும் மதுரை நகரில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டிருந்தது. இதனால் மதுரை நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வாகன போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது. 

Story image

மேலும் கோரிப்பாளையத்தில் இருந்து ஏ.வி. மேம்பாலத்தை கடக்க முயன்ற ஒருசில வாகனங்களையும் அங்கு சோதனைச் சாவடி அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்கள் வாகன ஓட்டிகளிடம் தீவிரமாக விசாரித்த பின்னரே பாலத்தை கடக்க அனுமதித்தனர். நகரின் முக்கிய பகுதிகளில் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். 

Story image

மேலும் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படையினரும் ஆங்காங்கே கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். விதிகளை மீறி தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிந்தவர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுமுடக்கத்தால் ஞாயிற்றுக்கிழமை மதுரை நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.