தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அம்பாசமுத்திரம் அருகே கள்ள நோட்டு வைத்திருந்ததாக ஒருவர் கைது: ரூ. 65,000 கள்ளப் பணம் பறிமுதல்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கள்ள நோட்டு புழக்கத்தில் உள்ளதாக சிறப்பு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அம்பாசமுத்திரம் பகுதியில் காவலர்கள் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 

News image
பறிமுதல் செய்யப்பட்ட கள்ளப் பணம்
Updated On :7 மே 2020, 9:19 am

DIN

அம்பாசமுத்திரம்: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கள்ள நோட்டு புழக்கத்தில் உள்ளதாக சிறப்பு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அம்பாசமுத்திரம் பகுதியில் காவலர்கள் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 

விசாரணையில், அம்பாசமுத்திரம் அருகே உள்ள அயன்சிங்கம்பட்டியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் மகேந்திரன் என்பவர் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டுவருவது தெரியவந்ததை அடுத்து அவரை காவலர்கள் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ. 65,000 கள்ளப் பணம் மற்றும் ஒரு மோட்டார் பைக்கை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மகேந்திரன் 2008 -ஆம் ஆண்டு வைராவிகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த செவிலியரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் ஆவார். 

மேலும் இவர் மீது தென்காசி வள்ளியூர் திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.