ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் புதன்கிழமை மேலும் புதிதாக 87 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,213 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புதிதாக தொற்று பாதித்தவர்களில், அதிகபட்சமாக ஜெய்ப்பூரில் மட்டும் 32 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. பாலியில் 24 பேரும், உதய்பூரில் 12 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, மாநிலத்தில் தொற்று காரணமாக 117 பேர் உயிரிழந்துள்ளனர்.