நாமக்கல்லில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
வெற்றிவேல் யாத்திரைக்கு தடைவிதித்த தமிழக அரசை கண்டித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.


நாமக்கல்: வெற்றிவேல் யாத்திரைக்கு தடைவிதித்த தமிழக அரசை கண்டித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெள்ளிக்கிழமை தொடங்குவதாக இருந்த வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றமும் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என பாஜகவுக்கு அறிவுறுத்தியுள்ளது.
திட்டமிட்டபடி திருத்தணியில் இருந்து வெற்றிவேல் யாத்திரை நடைபெறுமென பாஜக மாநிலத் தலைமை அறிவித்த நிலையில் திடீரென விதிக்கப்பட்ட தடையால் கட்சியினர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெருந்திரளாக வந்த அக்கட்சியினர் வெற்றிவேல் யாத்திரைக்கு தடைவிதித்த தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதில் கோட்ட பொறுப்பாளர் முருகேசன், பாஜக மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, மகளிர் அணி தலைவி சத்யபானு, தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...