மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹிமாச்சலில் டிச.31 வரை பள்ளிகள் திறப்பு இல்லை

ஹிமாச்சலப் பிரதேசத்தில் டிசம்பர் 31ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்பட மாட்டாது என மாநில அரசு தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :23 நவம்பர் 2020, 12:34 pm

ANI

ஹிமாச்சலப் பிரதேசத்தில் டிசம்பர் 31ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்பட மாட்டாது என மாநில அரசு தெரிவித்துள்ளது.

கரோனா காரணமாக கடந்த மார்ச் முதல் நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், மத்திய அரசின் தளர்வையடுத்து பல மாநிலங்கள் படிப்படியாக பள்ளிகளை திறந்து வருகின்றனர்.

இருப்பினும், பள்ளிகள் திறக்கப்பட்ட மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கரோனா தொற்று பாதிக்கப்படுகிறார்கள்.

இதனையடுத்து, ஹிமாச்சல் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் டிசம்பர் 31 வரை பள்ளிகள் திறக்க வேண்டாம் எனவும், ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குளிர்காலத்தில் மூடப்படும் பள்ளிகள் பிப்ரவரி 12, 2021 வரை மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.