இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:
நிவர் புயல் நாளை கரையைக் கடக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்டத்தில், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை, மருங்காபுரி, திருவரம்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், தொட்டியம் உள்ளிட்ட 11 பகுதிகளில் மிக அதிகம் பாதிக்கப்பட கூடியவை 3, அதிகம் பாதிக்கப்பட கூடியவை 38, மிதமாக பாதிக்கப்பட கூடியவை 41, குறைவாக பாதிக்கப்படக் கூடியவை 72 என மொத்தம் 154 இடங்கள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.