தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

37 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்: என்.டி.ஆர்.எஃப்.

தமிழகம், புதுச்சேரியில் இதுவரை 37,000 மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி உள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை இயக்குநர் எஸ்.என்.பிரதான் தெரிவித்துள்ளார்.

News image
கோவலம் கடற்கரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்.டி.ஆர்.எஃப். குழு
Updated On :25 நவம்பர் 2020, 10:47 am

ANI

தமிழகம், புதுச்சேரியில் இதுவரை 37,000 மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி உள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை இயக்குநர் எஸ்.என்.பிரதான் தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் முன்னேற்பாடுகள் குறித்து பிரதான் கூறுகையில்,

நிவர் அதிதீவிர புயலாக கணிக்கப்பட்டுள்ளது. அதை கருத்தில் கொண்டு மோசமான சூழலை கையாளும் வகையில் தயாராகியுள்ளோம். கடந்த 2 நாள்களாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் 25 அணிகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து 30 ஆயிரம் மக்களும், புதுச்சேரியில் இருந்து 7 ஆயிரம் மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றோம். புயலால் ஏற்படும் சேதங்களை குறைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.

நிவர் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.