வேளாண் சட்டத்திற்கு எதிராக தில்லி நோக்கி விவசாயிகள் பேரணி செல்வதால் தில்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று (வியாழக்கிழமை) தில்லி நோக்கி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
பேரணிக்கு தில்லி காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில், தில்லி - ஹரியாணா எல்லைப் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தில்லிக்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகிறது, இதனால் தில்லியின் எல்லைப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.