தில்லியில் திருடு போன 116 வாகனங்கள் மீட்பு : 14 பேர் கைது
தில்லியில் திருடு போன 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதை திருடிய 14 பேர் கொண்ட கும்பலைக் கைது செய்துள்ளதாகவும் காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.


தில்லியில் திருடு போன 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதை திருடிய 14 பேர் கொண்ட கும்பலைக் கைது செய்துள்ளதாகவும் காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இந்த 14 பேரைக் கொண்ட கும்பலின் தலைவராக 89 குற்ற வழக்குகளில் தொடர்புடைய விக்ரம் என்பவர் செயல்பட்டது தெரியவந்துள்ளது.
திருடியவுடன் அந்த வாகனங்களை அருகிலுள்ள பூங்காக்கள், பார்க்கிங் போன்ற இடங்களில் நிறுத்திவிட்டு செல்வதை வழக்கமாக செய்துள்ளனர்.
இந்நிலையில், செப்டம்பர் 25 ஆம் தேதி, மங்கோல்பூரியின் தொழில்துறை பகுதியில் இரண்டு வாகனங்கள் வெகு நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வாகனங்கள் திலக் நகர் மற்றும் தெற்கு ரோகிணி பகுதிகளில் இருந்து திருடப்பட்டதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
அந்த வாகனத்தை எடுக்க வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததில், மேலும் 10 பேர் சிக்கினார்கள்.
இதனையடுத்து, அவர்கள் திருடிய 39 உயர்தர வாகனங்கள் உள்பட 116 வாகனங்களை காவல் துறையினர் மீட்டதாக துணை ஆணையர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...