ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

நாசிக்கில் 2 விவசாயிகள் தற்கொலை

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

News image

கோப்புப்படம்

Updated On :2 அக்டோபர் 2020, 10:16 am

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

நாசிக் மாவட்டம் மாலேகான் தாலுகாவில் உள்ள தியோகட் கிராமத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் பயிர்கள் நாசாமானதால் ஜாலேந்திர பவிஸ்கர் (36) என்ற விவசாயி விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

மற்றொரு சம்பவத்தில், சின்னார் தாலுகாவில் கடன் பிரச்னையால் கிருஷ்ணா சனப் (55) என்ற விவசாயி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

மேலும், இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.