வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கோழிக்கோடு விமான விபத்து : தொடர் சிகிச்சையில் 2 பேர்

கோழிக்கோடு விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் 2 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக ஏர் இந்தியா நிர்வாக இயக்குநர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

News image

கோழிக்கோடு விமான விபத்து

Updated On :8 அக்டோபர் 2020, 10:31 am

ANI

கோழிக்கோடு விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் 2 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக ஏர் இந்தியா நிர்வாக இயக்குநர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஏர் இந்தியா நிர்வாக இயக்குநர் ராஜீவ் பன்சால் கூறுகையில், 

கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில்  காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். 

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு காப்பீட்டு நிறுவனத்தின் காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

துபையிலிருந்து கோழிக்கோடுக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி 190 பேருடன் வந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரை இறங்கும்போது ஓடுதளத்தைக் கடந்து பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் இரு விமானிகள் உள்பட 21 பேர் பலியாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.