தில்லி கேட் அருகே அலிகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
தில்லி கேட் அருகே அலிகர் பகுதியில் பொம்மை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் செவ்வாய்க்கிழமை எரிவாயு உருலை வெடித்து சிதறியது, இதில் அருகில் இருந்த பல வீடுகள் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் 50 ஆண்டுகளாக பொம்மை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்த சகோதரர்கள் மனோஜ் (38) மற்றும் விஷால் (32) ஆகியோர் பலியாகினர்.
மேலும் பங்கஜ் (30) மற்றும் அபிஷேக் (26) ஆகியோரும் பலியாகினர், 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படைகள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து குறித்து பேசிய மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி விவேக் ஷர்மா, இது பொம்மை துப்பாக்கி தயாரிக்கும் நிறுவனம், பண்டிகை காலம் வருவதால் பெருமளவு சேமித்து வைத்திருக்கலாம். இந்த தொழிற்சாலைகளில் ஹைட்ராலிக் இயந்திரம் இருந்துள்ளது. இதுபோன்ற இயந்திரத்தில் அதிகம் எரியக்கூடிய எண்ணெய் இருக்கும். மீட்புப் பணிகள் முடிந்தவுடன் முழுமையான விசாரணை தொடங்கும் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயில் தேரோட்டம்

வைகையாற்றில் எழுந்தருளும் அழகருக்கு ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, பட்டு வஸ்திரம்

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


