சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தெலங்கானா வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

தெலங்கானா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு முற்றிலுமாக சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணமாக முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

News image
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் (கோப்புப்படம்)
Updated On :19 அக்டோபர் 2020, 11:34 am

PTI

தெலங்கானா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு முற்றிலுமாக சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணமாக முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட கூறுகையில்,

கடந்த 100 ஆண்டுகளில் ஹைதராபாதில் இவ்வளவு கனமழை பெய்தது இல்லை. இந்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஏழை குடும்பங்களுக்கும் ரூ. 10 ஆயிரம், வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் மற்றும் லேசான சேதமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், வீடுகள் இடிந்து விழுந்தும் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.