கோரக்பூர்-கொல்கத்தா சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை தடம் புரண்டு விபத்துகுள்ளானது.
கோரக்பூரி இருந்து கொல்கத்தாவிற்கு 05048 என்ற பண்டிகை கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கோராக்பூரில் இருந்து இன்று காலை 11 மணிக்கு நாளை காலை 4.45 மணிக்கு கொல்கத்தா சென்றடையும்.
இந்நிலையில், பிகார் மாநிலத்தின் சிலாத் மற்றும் சிஹோ இடையே வந்த போது 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதும் தெரிவிக்கவில்லை.
அந்த ரயில் தடம் புரண்டு நிற்பதால் அவ்வழியே மற்ற ரயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.