பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஈரோடு அரசு மகளிர் பள்ளியில் எல்.கே.ஜி.யில் மழலைகள் சேர்ப்பு

விஜயதசமி தினமான நேற்று ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்கியது.

News image
ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை
Updated On :26 அக்டோபர் 2020, 12:45 pm

DIN

ஈரோடு: விஜயதசமி தினமான நேற்று ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்கியது.

கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இந்நிலையில் விஜயதசமியான நேற்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நிகழ்ச்சி துவங்கியது.

மாணவர் சேர்க்கைக்கு பள்ளி கல்வி துறை அனுமதி அளித்திருந்தது. நேற்று ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் மழலைகள் சேர்த்து கொள்ளப்பட்டனர்.

விஜயதசமி என்பதால் பெற்றோர்கள் பலரும் மழலைகளை பள்ளியில் சேர்த்தனர். பள்ளியில் சேர்ந்த மழலைகளுக்கு பரிசு பொருட்கள், இனிப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் ஆசிரியைகள், மழலைகள் சேர்ப்பு பணியில் ஈடுபட்டனர்.

தலைமை ஆசிரியை சுகந்தி கூறும் போது, விஜயதசமி என்பதால் மழலைகளை சென்டிமெண்ட்டாக சேர்த்துள்ளோம். அரசு பள்ளிகளை திறக்க அனுமதிக்கும் நாளில் இருந்து மட்டுமே மழலைகள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவர் என்றார்.
இதே போல் பல அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் மழலைகள் சேர்த்து கொள்ளப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.