விழுப்புரம்: விசிக தலைவர் திருமாவளவனைக் கண்டித்து வானூரில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக கட்சியினரை செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.
வானூர் சட்டமன்றத் தொகுதி பாஜக சார்பில், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ராஜன் தலைமையில், புதுவை சாலை திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் மதியம் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
பாஜக நிர்வாகிகள் 40 பேரை காவல்துறை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.
தேபோல் பாஜக போராட்டத்தை எதிர்ப்பதற்காக விழுப்புரத்திற்கு சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 30 பேர், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கைது செய்யப்பட்டனர்.